
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி தற்போது ரஞ்சிகோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார். நேற்று மேற்குவங்க அணி, சவுராஸ்டிரா அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் மோதியது. போட்டி 9 மணிக்கு துவங்கிய நிலையில் கங்குலி வரவில்லை. முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் லேட்டாக வருவேன் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்குவங்க அணி கங்குலிக்கு மாற்று வீரராக ஜூகுன்வாலாவுடன் களமிறங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் டின்டா காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை களமிறக்க நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் 45 நிமிடங்கள் மேற்குவங்க அணி 10 வீரருடன் பீல்டிங் செய்தது. சுமார் 10.10 மணி அளவில் கங்குலி களமிறங்கினார்.



