11/27/09

தாமதமாக வந்த கங்குலி ???



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி தற்போது ரஞ்சிகோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார். நேற்று மேற்குவங்க அணி, சவுராஸ்டிரா அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் மோதியது. போட்டி 9 மணிக்கு துவங்கிய நிலையில் கங்குலி வரவில்லை. முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் லேட்டாக வருவேன் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்குவங்க அணி கங்குலிக்கு மாற்று வீரராக ஜூகுன்வாலாவுடன் களமிறங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் டின்டா காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை களமிறக்க நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் 45 நிமிடங்கள் மேற்குவங்க அணி 10 வீரருடன் பீல்டிங் செய்தது. சுமார் 10.10 மணி அளவில் கங்குலி களமிறங்கினார்.

சென்னை ஓபன் டென்னிஸ் ...

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக், வாவ்ரின்கா, சோடர்லிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் 15வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் (ஜன.4&10, 2010) நடக்க உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக் (குரோஷியா), ராபின் சோடர்லிங் (சுவீடன்), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ராஜீவ் ராம், கிம் கெவின் (அமெரிக்கா) டுடி செலா (இஸ்ரேல்) உட்பட 26 வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர் .

அடுத்த 3 ஆண்டுகள் இப்போட்டியை ஏர்&செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்த முறை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் நம்பர் 1 வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் இந்த முறையும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

நாடல் அதிர்ச்சி தோல்வி ??




லண்டனில் நடந்து வரும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இப்போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத் தில், டென்னிஸ் உலகின் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச் சித் தோல்வி அடைந்தார். சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொண்ட நடால் 46, 46 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.

இத்தாலி வீரருக்கு தடை

இத்தாலியைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரரான கியானி டா ரோஸ் (வயது23) லிக்குய்காஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவர் போட்டியின்போது ஊக்க மருந்து பயன்படுத்தியமையானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டார். உடனடியாக அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
கியானியிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையின் முடிவில் இத்தாலியின் ஒலிம்பிக் சபை, கியானிக்கு 20 ஆண்டுகள் தடைவிதித்தது. இவருடன் சேர்ந்து டாவைடு லூகாட்டோ என்ற வீரருக்கு 8 ஆண்டுகளும், அல்பனோ கொராஜின் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேபரியலி போசிசோ என்ற வீரர் தவறு செய்தமை நிரூபக்கப்படாமையால் அவர் விடு விக்கப்பட்டார்.

இந்தியா அபார வெற்றி !!!



கான்பூர் டெஸ்டில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா சுழலில் அசத்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் போட்டி "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 642 ரன்கள் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில், இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது .இந்நிலையில் இன்று ( 24 ம் தேதி ) நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மாத்யூஸ் (15) வெளியேறினார். பின் பிரசன்னா (29), ஹெராத் (13), முரளிதரன் (29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவீரா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.ஒன்பதாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் மெண்டிஸ் (27), யுவராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் .பின் வந்த வெலகேதராவை ஓஜா (4) சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து திரும்பினார். சமரவீரா (78) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 3, பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இந்தியாவின் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட்டார். இலங்கைக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதன் முறையாக முதலிடத்துக்கு பிடித்துள்ளது ..இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் கான்பூர் வெற்றி, 100 வது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100வது வெற்றி பெற்றுள்ள அணிகள் வரிசையில் இந்திய அணி 6 வது இடத்தை பிடித்துள்ளது.

11/23/09

பூபதி வெற்றி !



"ஏ.டி.பி., வேர்ல்டு டூர் பைனல்ஸ்" டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி வெற்றி பெற்றது. இதன் இரட்டையர் "ஏ' பிரிவு போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, செக் குடியரசின் பிரான்டிசக் செர்மாக், சுலோவாகியாவின் மைக்கேல் மெர்டினாக் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை பூபதி ஜோடி 6-3 என கைப்பற்றியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பூபதி-நோவல்ஸ் ஜோடி இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தியது. இறுதியில் பூபதி ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் பூபதி ஜோடி, போலந்தின் பிரைஸ்டன்பர்க், மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை சந்திக்கிறது.

உலக கோப்பைக்கு அர்ஜென்டினா ரெடி !!!



2010 ல் இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதிபெற்றுள்ளது.இந்திய தலைநகர் டில்லியில், 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூன்று கட்டமாக நடத்தப்பட்டது. முதல் இரண்டு தகுதிச்சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
மூன்றாவது மற்றும் கடைசி தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இதற்கான பைனலுக்கு அர்ஜென்டினா மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதிபெற்றன. முக்கியமான பைனலில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. இதன்மூலம் உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது.
உலக கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடுகின்றன.இத்தொடருக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.