11/27/09

சென்னை ஓபன் டென்னிஸ் ...

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக், வாவ்ரின்கா, சோடர்லிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் 15வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் (ஜன.4&10, 2010) நடக்க உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக் (குரோஷியா), ராபின் சோடர்லிங் (சுவீடன்), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ராஜீவ் ராம், கிம் கெவின் (அமெரிக்கா) டுடி செலா (இஸ்ரேல்) உட்பட 26 வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர் .

அடுத்த 3 ஆண்டுகள் இப்போட்டியை ஏர்&செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்த முறை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் நம்பர் 1 வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் இந்த முறையும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

0 comments:

Post a Comment