11/27/09

தாமதமாக வந்த கங்குலி ???



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி தற்போது ரஞ்சிகோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார். நேற்று மேற்குவங்க அணி, சவுராஸ்டிரா அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் மோதியது. போட்டி 9 மணிக்கு துவங்கிய நிலையில் கங்குலி வரவில்லை. முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் லேட்டாக வருவேன் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்குவங்க அணி கங்குலிக்கு மாற்று வீரராக ஜூகுன்வாலாவுடன் களமிறங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் டின்டா காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை களமிறக்க நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் 45 நிமிடங்கள் மேற்குவங்க அணி 10 வீரருடன் பீல்டிங் செய்தது. சுமார் 10.10 மணி அளவில் கங்குலி களமிறங்கினார்.

சென்னை ஓபன் டென்னிஸ் ...

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக், வாவ்ரின்கா, சோடர்லிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் 15வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் (ஜன.4&10, 2010) நடக்க உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக் (குரோஷியா), ராபின் சோடர்லிங் (சுவீடன்), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ராஜீவ் ராம், கிம் கெவின் (அமெரிக்கா) டுடி செலா (இஸ்ரேல்) உட்பட 26 வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர் .

அடுத்த 3 ஆண்டுகள் இப்போட்டியை ஏர்&செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்த முறை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் நம்பர் 1 வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் இந்த முறையும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

நாடல் அதிர்ச்சி தோல்வி ??




லண்டனில் நடந்து வரும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இப்போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத் தில், டென்னிஸ் உலகின் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச் சித் தோல்வி அடைந்தார். சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொண்ட நடால் 46, 46 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.

இத்தாலி வீரருக்கு தடை

இத்தாலியைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரரான கியானி டா ரோஸ் (வயது23) லிக்குய்காஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவர் போட்டியின்போது ஊக்க மருந்து பயன்படுத்தியமையானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டார். உடனடியாக அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
கியானியிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையின் முடிவில் இத்தாலியின் ஒலிம்பிக் சபை, கியானிக்கு 20 ஆண்டுகள் தடைவிதித்தது. இவருடன் சேர்ந்து டாவைடு லூகாட்டோ என்ற வீரருக்கு 8 ஆண்டுகளும், அல்பனோ கொராஜின் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேபரியலி போசிசோ என்ற வீரர் தவறு செய்தமை நிரூபக்கப்படாமையால் அவர் விடு விக்கப்பட்டார்.

இந்தியா அபார வெற்றி !!!



கான்பூர் டெஸ்டில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா சுழலில் அசத்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் போட்டி "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 642 ரன்கள் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில், இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது .இந்நிலையில் இன்று ( 24 ம் தேதி ) நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மாத்யூஸ் (15) வெளியேறினார். பின் பிரசன்னா (29), ஹெராத் (13), முரளிதரன் (29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவீரா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.ஒன்பதாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் மெண்டிஸ் (27), யுவராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் .பின் வந்த வெலகேதராவை ஓஜா (4) சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து திரும்பினார். சமரவீரா (78) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 3, பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இந்தியாவின் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட்டார். இலங்கைக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதன் முறையாக முதலிடத்துக்கு பிடித்துள்ளது ..இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் கான்பூர் வெற்றி, 100 வது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100வது வெற்றி பெற்றுள்ள அணிகள் வரிசையில் இந்திய அணி 6 வது இடத்தை பிடித்துள்ளது.

11/23/09

பூபதி வெற்றி !



"ஏ.டி.பி., வேர்ல்டு டூர் பைனல்ஸ்" டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி வெற்றி பெற்றது. இதன் இரட்டையர் "ஏ' பிரிவு போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, செக் குடியரசின் பிரான்டிசக் செர்மாக், சுலோவாகியாவின் மைக்கேல் மெர்டினாக் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை பூபதி ஜோடி 6-3 என கைப்பற்றியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பூபதி-நோவல்ஸ் ஜோடி இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தியது. இறுதியில் பூபதி ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் பூபதி ஜோடி, போலந்தின் பிரைஸ்டன்பர்க், மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை சந்திக்கிறது.

உலக கோப்பைக்கு அர்ஜென்டினா ரெடி !!!



2010 ல் இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதிபெற்றுள்ளது.இந்திய தலைநகர் டில்லியில், 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூன்று கட்டமாக நடத்தப்பட்டது. முதல் இரண்டு தகுதிச்சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
மூன்றாவது மற்றும் கடைசி தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இதற்கான பைனலுக்கு அர்ஜென்டினா மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதிபெற்றன. முக்கியமான பைனலில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. இதன்மூலம் உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது.
உலக கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடுகின்றன.இத்தொடருக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

11/22/09

சச்சின்-சிவசேனா???


சச்சின் நாட்டுக்காக விளையாடவில்லை பிசிசிஐகாக விளையாடுகிறார் என்று மீண்டும் சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட் குற்றம் சாட்டியுள்ளார். சிவசேனா பத்திரிக்கையான சாம்னாவில் சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட் சச்சின் நாட்டுக்காக விளையாடவில்லை பிசிசிஐ காக விளையாடுகிறார் என்றும் அவர் மகாராஷ்டிரா வளரும் கிரிக்கெட் வீ்ரர்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறி உள்ளார். சச்சின் போன்ற வீரர்கள் பணத்துக்காக தான் விளையாடுகிறார் நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்து உள்ளார்.இவரது கருத்துக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

உலக செஸ் - நேகி அபாரம்

இந்திய வீரர் பரிமார்ஜன் நேகி ரஷ்யாவில் நடக்கும் உலக செஸ் கோப்பை போட்டியில்,அபாரமாக வென்றார்.
முன்னணி வீரர் வாடிம் மிலாவுடன் (சுவிஸ்) மோதி, கடுமையாகப் போராடி வென்றார். இதனால் 2வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நேகி அதிகரித்துக் கொண்டுள்ளார்.இந்திய வீரர்கள் சூர்ய சேகர் கங்குலி, சாண்டிபன் சந்தா இருவரும் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் வென்றனர். எனினும், ஹாலந்தின் எர்வினுடன் மோதிய மற்றொரு இந்திய வீரர் சசிகிரண் வெற்றி வாய்ப்பை வீணடித்து ஆட்டத்தை டிரா செய்தார். உலக ஜூனியர் சாம்பியனான அபிஜீத் குப்தாவும் ரஷ்யாவின் நிகிடா உடனான தனது ஆட்டத்தை டிரா செய்தார்.

11/21/09

ஈராக்கிற்கு தடை ??

உலக கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) ஈராக் அரசின் குறுக்கீடு காரணமாக ஈராக் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அதில் உள்ள வீரர்க்ள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. ஃபிபா இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “ஃபிபா விதிகளின்படி, ஈராக்கைச் சேர்ந்த கால்பந்து கிளப், கால்பந்து குழுவினர் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது” எனக் கூறப்பட்டுள்ளது.இதேபோல், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் எந்த மாநாட்டிலும், ஈராக் கால்பந்து கூட்டமைப்பு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுவதுடன், ஈராக் கால்பந்து கூட்டமைப்பிற்கு இனி எந்தவித நிதியுதவியும் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் அவதிபடும் ப்ரெட் லீ

ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தான் அடிக்கடி காயமடைந்தாலும் தன் கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்து விடாது என்று கூறியுள்ளார். ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பது எனது முதல் குறிக்கோள், அதற்காக ஒரு நாள், இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆட்டங்களை தியாகம் செய்யும் எண்ணமுமில்லை என்று கூறியுள்ளார் பிரட் லீ.
"10, 15 ஆண்டுகளாக தொடர்ந்து 150 கி.மீ. வேகத்தில் வீசுகிறேன். அதனால் காயங்கள் ஏற்படுவது இயற்கை. ஆனால் நான் இன்னும் முடிந்துவிடவில்லை. நான் புத்துணர்வுடன் இருக்கிறேன், என்னிடம் இன்னும் நிறைய ஆண்டுகளுக்கான தெம்பு இருக்கிறது.சாம்பியன் லீக் கிரிக்கெட்டினால் இந்த காயம் ஏற்படவில்லை.
நாட்டிற்கு விளையாட கிடைக்கும் வாய்ப்பை விட்டு விட விரும்பவில்லை. அதே சமயத்தில் ஒரு நாள், இருபதுக்கு 20 தொடர்களிலும் நாட்டிற்காக விளையாட ஆசைப்படுகிறேன், ஆனால் இப்போதைக்கு டெஸ்ட் அணியில் மீண்டும் நிரூபிக்க ஆவலாயிருக்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் பிரட் லீ.

11/20/09

இன்னொரு மைல்கல் ...

இந்​திய கிரிக்​கெட் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் சர்வ​தேச கிரிக்​கெட் போட்​டி​க​ளில் மொத்​தம் 30 ஆயி​ரத்​துக்​கும் அதி​க​மான ரன்​க​ளைக் குவித்து உலக சாதனை படைத்​துள்​ளார்.30 ஆயி​ரம் ரன்​களை எடுக்​கும் முத​லா​வது வீரர் சச்​சின் ஆவார். ஆம​தா​பா​தில் நடை​பெற்ற இலங்கைக்கு எதி​ரான டெஸ்​டின் 2-வது இன்​னிங்​ஸில் சச்​சின் 35 ரன்​களை எடுத்​த​போது அவர் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​க​ளில் 30 ஆயி​ரம் ரன்​கள் எடுத்தார்.1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்​டி​யில் அறி​மு​க​மான சச்​சின் தற்​போது கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் 21-ம் ஆண்​டில் நுழைந்​துள்​ளார்.டெஸ்ட் போட்​டி​கள்,​ ஒரு தின போட்​டி​கள்,​ சர்​வ​தேச டி20 போட்​டி​கள் என மூன்​றி​லும் சேர்த்து அவர் தற்​போது 30,065 ரன்​க​ளைச் சேர்த்​துள்​ளார்.சச்​சின் குவித்த ரன்​கள் விவ​ரம்:​​போட்டி ரன்​கள் சதம் அரை சதம் சரா​சரிடெஸ்ட் ​ 160 ​ ​ 12,877 43 53 54.79ஒரு நாள் 436 ​ 17,178 ​ 45 91 44.50டி20 ​ ​ ​ ​ 1 ​ ​ ​ 10 ​ ​ -​ -​ 10.00

இந்தியா ஸ்ரீலங்கா - போட்டி டிரா

முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாளான இன்று இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்தது. சச்சின் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்துள்ள 43வது சதமாகும். மிஷ்ரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். காம்பிர் 114 ரன்களுடன் அவுட் ஆனார். முன்னதாக இலங்கை தனது முதல் இன்னிங்சை 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன் என்ற நிலையில் டிக்ளர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் 426. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி கான்பூரில் துவங்குகிறது.

இந்தியா ஸ்ரீலங்கா - போட்டி டிரா

முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாளான இன்று இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்தது. சச்சின் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்துள்ள 43வது சதமாகும். மிஷ்ரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். காம்பிர் 114 ரன்களுடன் அவுட் ஆனார். முன்னதாக இலங்கை தனது முதல் இன்னிங்சை 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன் என்ற நிலையில் டிக்ளர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் 426. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி கான்பூரில் துவங்குகிறது.

சாதனை தகர்ப்பு !

முதல்தர டெஸ்ட் போட்டிகளில் அதிக "கேட்ச்' பிடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்தின் பீட்டர் மெக்கிலாசன்.

நியூசிலாந்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட அணிகள் பங்கேற்ற முதல்தர டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இப்போட்டியில், வடக்கு மாவட்ட அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கினார் பீட்டர் மெக்கிலாசன். இதில் 12 "கேட்சுகள்' (முதல் இன்னிங்ஸ் 6, இரண்டாவது இன்னிங்ஸ் 6) பிடித்து அசத்தினார். இதன் மூலம் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் அதிக "கேட்ச்' பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் வேய்ன் ஜேம்ஸ், ஆஸ்திரேலியாவின் ரோட் மார்ஷ் ஆகியோர் முதல் தர போட்டிகளில் 11 "கேட்ச்' பிடித்து சாதனை படைத்திருந்தனர்.

நடுவருக்கு ஆப்புத ..

2010-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது. போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி தகுதி பெற்றுள்ளன.

பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் பிரான்ஸ்- அயர்லாந்து அணிகள் மோதிய தகுதி சுற்றில் ஆட்டம் சர்ச்சையில் முடிந்தது. பிரான்ஸ் வீரர் வில்லியம்ஸ் கல்லாஸ் அடித்த கோலால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த அணி கேப்டன் ஹென்றி கையால் பந்து பட்டு சென்றதைதான் வில்லியம்ஸ் கோல் அடித்தார். இதை நடுவர் கவணிக்க தவறிவிட்டார்.

ஹென்றி மோசடி செய்து விட்டதாக அயர்லாந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். பந்து கையில் பட்டதை ஹென்றியும் ஒப்புக்கொண்டார். ஆனால் நான் நடுவர் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.

சர்ச்சைக்குரிய இந்த போட்டியின் முடிவால் அயர்லாந்து வாய்ப்பை இழந்தது. இதனால் இந்தப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று அயர்லாந்து வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அயர்லாந்து நாட்டு நிதி மந்திரி டெர்பனட் கூறும்போது நாங்கள் வெற்றி பெற வேண்டிய போட்டி “டிரா” ஆனது. எங்களை ஏமாற்றி விட்டனர் என்றார்.

இந்தப்போட்டியை மீண்டும் நடத்த கோரி அயர்லாந்து கால்பந்து சங்கம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை வலியுறுத்தியுள்ளது. அயர்லாந்தின் வேண்டுகோள் கடிதம் வந்துள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

என்ன கொடுமை சார் இது..... நடுவருக்கு ஆப்புத ...

பிரசன்னாவுக்கே தெரியலையாம் ......

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 72 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்தது.6-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே-பிரசன்னா ஜெயவர்த்தனே ஜோடி 351 குவித்து சாதனை படைத்தது.
இதற்கு முன்பு 1937-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பிராட்மேன்-பிங்கில்டன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 346 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. 72 ஆண்டுகால சாதனையை அவர்கள் முறியடித்தனர்.

உலக சாதனையை முறியடித்தது பிரசன்னா ஜெயவர்த்தனேவுக்கு தெரியாதம் . இது பற்றி அவர் கூறியதாவது:-

எனக்கு சாதனை பற்றி எதுவும் தெரியாது. களத்தை விட்டு வெளியே வந்த போதுதான் அணியின் மேலாளர் உலக சாதனையை முறியடித்தது பற்றி என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்போதுதான் சாதனையை முறியடித்தது தெரியும். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பிரசன்னா ஜெயவர்த்தனே தெரிவித்தார். அவர் 154 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நம்ம ஆளு புட்டுகிச்சு !!!!!!

செய்னா நேவல் தோல்வி

சீன சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
சீன சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் ஷாங்காய் நகரில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் ஜிங்யுன் ஜியாவை எதிர்கொண்டார். முதல் செட்டை செய்னா 21-17 என கைப்பற்றினார். பின்னர் ஜிங்யுன் இரண்டாவது செட்டை 21-8 என தன்வசப்படுத்தி, பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் தொடர்ந்து அபாரமாக ஆடிய சீன வீராங்கனை 21-13 என கைப்பற்றினார். இறுதியில் செய்னா 21-17, 8-21, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து, காலிறுதி வாய்ப்பை இழந்தார்.

வந்துடாகப்பா பிரான்ஸ்..

உல​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில் விளை​யாட பிரான்ஸ்,​ போர்ச்​சுக்​கல் அணி​கள் தகுதி பெற்​றுள்​ளன.
2010-ம் ஆண்டு உல​கக் கோப்பை கால்​பந்​துப்​போட்​டி​களில் பங்​கேற்​கும் அணிகளுக்கான தகு​திச் சுற்​றுப் போட்​டி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இ​தில் போர்ச்​சுக்​கல்,​ கிரீஸ்,​ ஸ்லோ​வே​னியா அணி​கள் ஏற்​கெ​னவே தகுதி பெற்று விட்​டன. இந்​நி​லை​யில் புதன்​கி​ழமை நடை​பெற்ற தகு​திச் சுற்று ஆட்​டத்​தில் அயர்​லாந்தை,​ பிரான்ஸ் வீழ்த்​தி​யது. இதன்​மூ​லம் பிரான்ஸ் அணி உல​கக் கோப்​பைப் போட்​டிக்​குத் தகுதி பெற்று விட்​டது.

பெடரர்க்கே சவாலா ?

உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரில் கடின சுற்றில் இடம் பெற்றுள்ளார்.

ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரில் உலகின் "டாப்-8' வீரர்கள் பங்கேற்கின்றனர் . இது வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த எட்டு வீரர்கள் "ஏ', "பி' என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றில் மோதுவார்கள். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். இத்தொடரின் பைனல் வரும் 29ம் தேதி நடக்கிறது.

"ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், லீக் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ, இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டஸ்கோ உள்ளிட்டோரை சந்திக்கிறார்.

ரோடிக் காயம் :
"பி' பிரிவில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக சுவீடனில் ராபின் சோடர்லிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவில் ஸ்பெயின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் டோகோவிச், ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இத்தொடருக்கு முன் காயம் காரணமாக யாரேனும் விலக நேரிட்டால், பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்கா மாற்று வீரராக களமிறங்குவார்.

11/19/09

ட்ரவ் செய்யுமா இந்தியா?!


இலங்கைக்கு எதிராக ஆமதாபாதில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க இந்திய வீரர்கள் போராடி வருகின்னர்.
இந்தியா,​ இலங்கை அணிளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் ஆமதாபாதில் திங்கள்கிழமை துவங்கியது. முதல் இன்னிங்ஸில் திராவிட்,​ தோனி சதத்தால் இந்தியா 426 ரன்கள் குவித்தது.
4-ம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தை மஹேல ஜயவர்த்னாவும்,​ பிரசன்ன ஜயவர்த்னாவும் துவக்கினர்.இருரும் நிதாமாக ஆடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய மஹேல ஜயவர்த்தனா 250 ரன்ளைக் கடக்க,​ மறுமுனையில் பிரசன்ன ஜயவர்த்தனா சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தக் கூட்ணியைப் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.ருழியாக 275 ரன்கள் எடுத்திருந்போது மஹேல ஜயவர்த்தனா,​ அமித் மிஸ்ரா பந்தில் ஆட்மிழந்தார். 435 பந்துளைச் சந்தித்து 275 ரன்களை மஹேல எடுத்தார். பின்னரும் இலங்கை ரன்களை குவித்தது. இறுதில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன்கள் என்ற நிலையில் இன்னிங்û முடித்து கொண்டது . இந்தியாவின் முதல் இன்னிங்û விட 334 ரன்கள் அதிகமாக இருதது . ​334 ரன்கள் எடுத்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் 2-வது இன்னிங்​ûஸத் துவக்கினர்.
சேவாக்கும்,​ கம்பீரும் துவக்க ஆட்டக்காரர்ளாக களமிறங்கினர். இருரும் நிதானத்துடன் ஆடினர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.ஆட்நேர இறுதியில் கம்பீர் 74 ரன்ளுனும்,​ அமித் மிஸ்ரா 12 ரன்ளுனும் ஆட்மிழக்காமல் இருந்னர்.

ஸ்கோர்:​ இந்தியா முதல் இன்னிங்ஸ் 426 .
லங்கை முதல் இன்னிங்ஸ் 760-7வி.டிக்ளேர் ​(தில்ஷன் 112, பரவிதனா 35, சங்கரா 31, மஹேல ஜயவர்த்தனா 275, சமவீரா 70, மேத்யூஸ் 17, பிரசன்ன ஜயவர்த்தனா 154 ​(ஆட்மிழக்வில்லை)​,​ டம்மிகா பிரசாத் 21, ஜாகீர் கான் 2வி-​109, இஷாந்த் சர்மா 2வி-​135, ஹர்ஜன் 2வி-​189, மிஸ்ரா 1வி-​203)
இந்தியா 2-வது இன்னிங்ஸ் 190-2வி ​(கம்பீர் 74 ​(ஆட்மிழக்வில்லை)​,​ சேவாக் 51, திராவிட் 38, அமித் மிஸ்ரா 12, ஹெராத் 1வி-​47, வெலேகெடேரா 1வி-​31).​​​


6 வது அதிகபட்சம்
நேற்று முதல் இன்னிங்சில் 760 ரன்கள் குவித்து அசத்தியது இலங்கை அணி. இதன் மூலம் டெஸ்ட் அரங்கின் ஒரே இன்னிங்சில், 6 வது அதிக பட்ச ரன்களை பதிவு செய்தது. இப்பட்டியலின் முதலிடத்திலும் இலங்கை அணி (952 ரன்கள், எதிர்-இந்தியா, 1997) தான் உள்ளது. ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகள்:
ஸ்கோர் அணி எதிரணி ஆண்டு இடம்
952 இலங்கை இந்தியா 1997 கொழும்பு
903 இங்கிலாந்து ஆஸி., 1938 லண்டன்
849 இங்கிலாந்து வெ.இண்டீஸ் 1930 கிங்ஸ்டன்
790 வெ.இண்டீஸ் பாக்., 1958 கிங்ஸ்டன்
765 பாக்., இலங்கை 2009 கராச்சி
760 இலங்கை இந்தியா 2009 ஆமதாபாத்
* இலங்கை அணி குவித்த 760 ரன்களே, இந்திய மண்ணில் ஒரே இன்னிங்சில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கடந்த 1985 ம் ஆண்டு இங்கிலாந்து அணி, சென்னையில் நடந்த போட்டியில் 652 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்தியாவுல வோர்ல்ட்கப் நடக்க போகுதுப்பா...


ஆசிய கண்டத்தில் நடக்கபோகும் கிரிக்கெட் திருவிழாவை காண நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்களுக்காக போட்டி நாடாகும் அட்டவணையைத் தருவதில் பேறு மகிழ்ச்சி அடைகிறோம் .
இந்தியா : கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், சென்னை, முஹலி, அஹ்மேடபாத், நாக்பூர், மும்பை

ஸ்ரீ லங்கா : கொளும்பு

பங்களாதேஷ்: டாகா , பாடுல்லாஹ் அல்லது மிர்பூர்

பிரிவு ஏ : ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்ரீலங்கா, ஜிம்பாப்வே, கனடா, கென்யா .

பிரிவு பி : இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியதீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாண்ட்ஸ்

Match No. Date Match Venue

1 19-Feb Bangladesh vs India Dhaka

2 20-Feb New Zealand vs Kenya Chennai

3 20-Feb Sri Lanka vs Canada Hambantota

4 21-Feb Australia vs Zimbabwe Ahmedabad

5 22-Feb England vs Netherlands Nagpur

6 23-Feb Pakistan vs Kenya Hambantota

7 24-Feb South Africa vs West Indies New Delhi

8 25-Feb Australia vs New Zealand Nagpur

9 25-Feb Bangladesh vs Ireland Dhaka

10 26-Feb Sri Lanka vs Pakistan Colombo

11 27-Feb India vs England Kolkata

12 28-Feb West Indies vs Netherlands New Delhi

13 28-Feb Zimbabwe vs Canada Nagpur

14 1-Mar Sri Lanka vs Kenya Colombo

15 2-Mar England vs Ireland Bangalore

16 3-Mar South Africa vs Netherlands Mohali

17 3-Mar Pakistan vs Canada Colombo

18 4-Mar New Zealand vs Zimbabwe Ahmedabad

19 4-Mar Bangladesh vs West Indies Dhaka

20 5-Mar Sri Lanka vs Australia Colombo

21 6-Mar India vs Ireland Bangalore

22 6-Mar England vs South Africa Chennai

23 7-Mar Kenya vs Canada New Delhi

24 8-Mar Pakistan vs New Zealand Pallekele

25 9-Mar India vs Netherlands New Delhi

26 10-Mar Sri Lanka vs Zimbabwe Pallekele

27 11-Mar West Indies vs Ireland Mohali

28 11-Mar Bangladesh vs England Chittagong

29 12-Mar India vs South Africa Nagpur

30 13-Mar New Zealand vs Canada Mumbai

31 13-Mar Australia vs Kenya Bangalore

32 14-Mar Pakistan vs Zimbabwe Pallekele

33 14-Mar Bangladesh vs Netherlands Chittagong

34 15-Mar South Africa vs Ireland Kolkata

35 16-Mar Australia vs Canada Bangalore

36 17-Mar England vs West Indies Chennai

37 18-Mar Sri Lanka vs New Zealand Mumbai

38 18-Mar Ireland vs Netherlands Kolkata

39 19-Mar Australia vs Pakistan Colombo

40 19-Mar Bangladesh vs South Africa Dhaka

41 20-Mar Zimbabwe vs Kenya Kolkata

42 20-Mar India vs West Indies Chennai

43 23-Mar First Quarter-final Dhaka

44 24-Mar Second Quarter-final Colombo

45 25-Mar Third Quarter-final Dhaka

46 26-Mar Fourth Quarter-final Ahmedabad

47 29-Mar First Semi-final Colombo

48 30-Mar Second Semi-final Mohali

49 2-Apr Final Mumbai