11/20/09

பெடரர்க்கே சவாலா ?

உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரில் கடின சுற்றில் இடம் பெற்றுள்ளார்.

ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரில் உலகின் "டாப்-8' வீரர்கள் பங்கேற்கின்றனர் . இது வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த எட்டு வீரர்கள் "ஏ', "பி' என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றில் மோதுவார்கள். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். இத்தொடரின் பைனல் வரும் 29ம் தேதி நடக்கிறது.

"ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், லீக் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ, இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டஸ்கோ உள்ளிட்டோரை சந்திக்கிறார்.

ரோடிக் காயம் :
"பி' பிரிவில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக சுவீடனில் ராபின் சோடர்லிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவில் ஸ்பெயின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் டோகோவிச், ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இத்தொடருக்கு முன் காயம் காரணமாக யாரேனும் விலக நேரிட்டால், பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்கா மாற்று வீரராக களமிறங்குவார்.

0 comments:

Post a Comment